தமிழனுக்கு வாய்க்கரிசி போடும் சோனியா

தமிழ்நாட்டில் சூடு சொரணை வெக்கம் மானம் இல்லாதவன் யார் என்றால் இவ்வளவு நடந்த பிறகும் காங்கிரஸ் க்கு ஓட்டு போடலாம் என்று இருக்கிறானே   அவன் தான்.

இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்கள் , ஆட்கள் , பண உதவி எல்லாம் செய்து தமிழர்களை கொன்றுகுவிக்கும் சோனியா காந்தி, இப்போது தேர்தலில் ஓட்டு வாங்கும் ஒரே நோக்கத்திற்காக இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பபோவதாக அறிவித்துள்ளார். 

 

soniya

tamilsdead

 

இவ்வளவு நாள் போர்நிறுத்தம் பற்றி ஒருவார்த்தை கூட பேசாமல் போதாததுக்கு ஆயுதம் கொடுத்து கொல்ல சொன்னவளுக்கு தேர்தல்லுக்கு ஒரு மாதம் முன் மட்டும் மக்கள்மீது அக்கறை பொங்கிக்கொண்டு வந்துவிட்டது போலும். அப்படி தேர்தலுக்காகவாவது எதோ தமிழர்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொள்ளவேண்டாம். இதற்கும் ஒரு கேவலமான பிண்ணனி இருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெறமுனா உறுப்பினர், காயமடைந்த சிங்கள இராணுவத்துக்கு தேவையான மருந்துப் பொருட்கள் இல்லையென்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இலங்கை அமைச்சர் நிர்மல் சிறிபால டே, போரில் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கத் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், குறிப்பாக பெத்தட்டின் மருந்து மிகக் குறைவாக உள்ளது என்று மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது என்றும், விரைவில் கிடைத்துவிடும் என்றும் கூறி இருக்கிறான்.
      
     யாருடைய நிவாரணத்துக்காக பொருட்களை அனுப்ப்கிறார் தெரிகிறதா.  தமிழினத்தை படுகொலை செய்பவன் மீது தான் அவ்வளவு அக்கறை. இதன் மூலம் தமிழர்களையும் கொன்றுவிடலாம் தேர்தலில் ஓட்டும் வங்கி மீதமுள்ள தமிழர்களை அடுத்தமுறை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கனவு காண்கிறார். 

காங்கிரஸ் க்கும் அதோடு குலாவும் மற்ற ஓட்டு பொறுக்கிகளுக்கு தமிழர்கள் ஒரு பாடம் சொல்லித்தருவோம்.  யார் யாரைக் கொன்றால் என்ன , யார் யாரைக் கற்பழித்தால் என்ன என்று எல்லோரும் இருந்துவிடுவோம், சன் டி வி , கலைஞர் டி வி பார்த்துவிட்டு மீண்டும் தமக்கே வாக்களித்து விடுவார்கள், பதவியில் போய் உட்கார்ந்துகொள்ளலாம் என்று இருப்போரை இந்தமுறை நாம் புறக்கணிப்போம் 

cong5

மக்களே காங்கிரஸ் க்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் தமிழன் மீது விழும் குண்டுகள். இதை நாம் மன்னித்தாலும் தமிழனாகப் பிறந்ததால் கொல்லப்பட்டானே அவனுடைய ஆத்மா மன்னிக்காது.

2 Responses to தமிழனுக்கு வாய்க்கரிசி போடும் சோனியா

  1. Jayakumar சொல்கிறார்:

    Very very good senthil

  2. Devaki சொல்கிறார்:

    If any person vote to congress their votes will be considered a weapon to kill tamils.

    I don’t even understand, can’t an Indian vote for an Indian. Why all these people are voting to an Italian woman?

பின்னூட்டமொன்றை இடுக