சென்ற வெள்ளிக்கிழமை (Feb 20 2009) வாஷிங்டன் டி சி யில் வெள்ளை மாளிகை முன்பு நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு பேரணிக்கு சென்றிருந்தேன். அமெரிக்கா மற்றும் கனடா வில் வாழும் தமிழர்கள் ஒன்று கூடி இலங்கையில் கொல்லாப்பட்டுகொண்டிருக்கும் நம் உறவுகளுக்காக குரல் கொடுத்தனர். எல்லோருடைய மனதிலும் ஒபாமா நம் ஈழத்தமிழர்களை காக்க ஏதாவது செய்யமாட்டாரா என்ற ஒரு ஆதங்கம் தெரிந்தது. இந்தப் பேரணியின் வெற்றியைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Ellipse திடலில் திரும்பிய பக்கமெல்லாம் கொடிகள் மற்றும் பதாகைகள் ஏந்திய தமிழ் மக்கள் கூட்டம். இலங்கையில் நடக்கும் படுகொலைகளை உலகம் கண்திறந்து பார்க்கவேண்டும் என்று நடைபெற்ற இந்த பேரணிக்கு போட்டியாக இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக ஒரு சிறு கூட்டம் நடந்ததை பார்க்கமுடிந்தது. அந்த கூட்டம் அங்கு சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழர்களை உசுப்பேற்றும் வகையில் வாசகங்கள் எழுதிய பாதாகைகளை பிடித்திருந்தனர். காவல் துறையினரும் ஒருங்கினைப்பளர்களும் அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்காதவாறு பார்த்துக்கொண்டனர். 7000 தமிழ் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் தாக்குபிடிக்க முடியாமல் அந்த 100 பேர் கொண்ட சிங்களர் கூட்டம் மதியமே கலைந்து போய்விட்டது .
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் காணொளி களையும் இங்கு இணைக்கின்றேன்.
போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் :
President Obama Stop the war
No More Genocide
Hillary Clinton Help Us
Recognize TamilEelam
What we want : Tamil Eelam
When We want: Right Now
பேரணி முடிந்து வீடு திரும்பும்போது மனதில் ஒரு நிம்மதி. தமிழீழ விடுதலைக்காக என் குரலும் சேர்ந்து ஒலித்தது மற்றும் இந்தப் பேரணியை ஈழத்திலிருந்து காணும் தமிழனுக்கு ஏற்படும் ஆறுதலுக்கு நானும் பயன்பட்டதற்கு.